மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் நகர குழு சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் குடியாத்தம் பிச்சனூர் தேரடியில் நகர செயலாளர் பி.காத்தவராயன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநிலக் குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரிடம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இதில் மாநில குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன், மாவட்ட, நகர குழு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.