சென்னை, டிச.19- சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு (பிரஸ் கிளப்) நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு வியாழனன்று (டிச.19) சேப்பாக் கத்தில் உள்ள மன்ற வளாகத்தில் நடை பெற்றது. மன்றத்தின் பொதுச்செயலாளர் ஆசிப் தலைமையில் நடைபெற்ற விழா வில் புதிய நிர்வாகிகள் பொறுப் பேற்றுக்கொண்டனர். 24 ஆண்டு களுக்கு பின்னர் உற்சாகமாக நடை பெற்ற இந்த விழாவில் மூத்த பத்திரி கையாளர் என்.ராம் புதிய நிர்வாகி களை வாழ்த்திப்பேசுகையில், தேர்த லில் வெற்றிபெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்க ளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தேர்தலின் போது பிரச்சா ரம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பத்திரிகை யாளர்கள், ஊடகவியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், தலைமை செய்தியாளர் கள், பெண் பத்திரிகையாளர்கள், நிழற்படசெய்தியாளர்கள் பங்கேற் றிருப்பது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் நீதிக்கான அணியும் ஒற்றுமைக்கான அணியும் போட்டி யிட்டன. சென்னை பத்திரிகையாளர் கள் மன்றம் சிறப்பாக செயல்பட நீதி யும் நியாயமும் அவசியம். அதோடு முக்கியம் ஒற்றுமை. நீதியும் நேர்மை யும் இருந்து ஒற்றுமை இல்லாவிடில் எந்த பயனும் இல்லை. இது இரண்டும் முரண்பட்டது அல்ல. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. நீதிக்கான அணி வெற்றிபெற்றவு டன் ஒற்றுமை அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட பத்திரிகையாளர் ஷபிர் அகமது வெற்றி பெற்ற ஆசீப்புக்கு வாழ்த்து தெரி வித்தார். இது ஆரோக்கியமான துவக்கம். மத்திய தேர்தல் ஆணையத் தின்மீது கூட குற்றச்சாட்டு வருகிறது. ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதி தாசன் தலைமையில் தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்றது. தேர்த லுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கடைசி நேரத்தில் சிலர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களை உறுப்பினருமான வில்சன் மற்றும் அவரது மகன் திறமையாக வாதாடி வெற்றிபெற்றனர். இவர்களது பணியும் தேர்தல் நடத்த அமைக்கப்பட்ட வழி காட்டும் குழுவின் பணியும் பாராட்டத் தக்கது. போலியான உறுப்பினர்களை நீக்கி உண்மையான உறுப்பினர்களை சேர்த்து தேர்தல் நடத்தியதால் 92 விழுக்காடு வாக்குப்பதிவு நடை பெற்றது. தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதால் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் தற்போதுள்ள 1502 உறுப்பி னர்களில் பெண் பத்திரிகையாளர்கள் 144 பேர் மட்டும் தான் உள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் அதிகளவில் உறுப்பினர்களாக சேர்க்கவேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் பத்திரிகை யாளர்கள் மன்றங்களை போல் சென்னை பத்திரிகையாளர்கள் மன்ற மும் இனி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். இவ்வாறு என்.ராம் பேசினார். மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங் பேசுகையில், இந்தமுறை நீதி பதியை கொண்டு காவல்துறையின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு தேர்தல் நடைபெற்றது. வருங்காலங் களில் இந்தநிலை தவிர்க்கப்பட்டு மூத்த பத்திரிகையாளர்களை கொண்டு தேர்தலை நடத்தவேண்டிய நிலையை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே சென்னை பத்திரிகையாளர் சங்க (எம்யூஜெ) தேர்தல் அப்படித்தான் நடைபெற்று வருகிறது என்றார். முழு உடல் பரிசோதனை அட்டை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்ற நிகழ்வுடன் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்கள் பில்ரோத் மருத்துவ மனையில் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்ட துவக்க விழாவும் நடைபெற்றது. அடை யாளப்பூர்வமாக மூத்த பத்திரிகை யாளர்களுக்கு இந்த அட்டைகளை பத்திரிகையாளர்கள் என்.ராம், பக வான் சிங் ஆகியோர் வழங்கினர். முன்னதாக புதிய நிர்வாகிகளை வாழ்த்திய நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமலர் முன்னாள் செய்தி ஆசிரியர் நூருல்லா, மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை பத்திரிகை யாளர் மன்ற பொதுச்செயலாளர் ஆசிப் தலைமை வகித்தார். தலைவர் சுரேஷ் வேதநாயகம், பொருளாளர் மணிகண் டன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் விழா வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர்.