பேருந்து மோதி முதியவர் பலி
காஞ்சிபுரம், பிப்.15 - வாலாஜாபாத் அடுத்த சேர்காடு மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்றொருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ராஜ வீதியில் பழனி என்பவர் மரக்கட்டை வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக ஊத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த வரதன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பழனி, வரதன் இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்தில் இருந்து புறப்பட்டு ஒரகடம் செல்லும்போது, சேர்க்காடு மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தை வலது பக்கமாகத் திரும்பி வாலாஜாபாத் மார்க்கமாக செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பின்னால் அமர்ந்து கொண்டிருந்த வரதன், கீழே விழுந்ததில் வலது கை, பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் பலத்த காயமடைந்த பழனி வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சை
சென்னை, பிப்.15- ஒரு அரிதான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய பாதிப்பால் போராடிக் கொண்டிருந்த 12 வயதான சிறுமிக்கு வடபழனி, காவேரி மருத்துவமனை சிறப்பான சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அளித்திருக்கிறது. சிறார்களில் ஹைப்பர்டிராஃபிக் அடைப்புள்ள இதய தசைநோய்க்கான சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக ஒரு நுட்பமான, அதிக இடர்வாய்ப்புள்ள அறுவைசிகிச்சையை இம்மருத்துவமனையின் இதயநாள மற்றும் மார்பறை அறுவைசிகிச்சை பிரிவின் மருத்துவர். அன்பரசு மோகன்ராஜ் தலைமையிலான நிபுணத்துவமிக்க மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக செய்திருக்கிறது. விரிவாக்கப்பட்ட இடைச்சுவர் தசைப்பகுதி நீக்கம் என இந்த அறுவைசிகிச்சை செயல்முறை அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு மரபணு பாதிப்பு நிலையாகும்; இதயத்தசை தடித்து புடைப்பதை இது ஏற்படுத்துகிறது. வயது வந்த பெரியவர்களிடம் இது அதிகளவு பொதுவாக காணப்படுகிற போதிலும் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு ஏற்படுவது மிகவும் அரிதானதே என்று மருத்துவர் கூறினார். அத்துடன் உயிருக்கு ஆபத்தானதாகவும் இது இருக்கிறது. இந்த இளம் சிறுமியை பொறுத்தவரை பெருநாடி வால்வுக்கு கீழே ஒரு அரிதான திசு வளர்ச்சியும் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கணிசமான ஆபத்துகள் இச்சிகிச்சையில் இருந்த போதிலும்கூட மருத்துவர்களது குழுவின் நிபு ணத்துவம் மற்றும் திறனின் காரணமாக இந்த அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக நிறைவடைந்தது என்று மருத்துவமனையின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ் கூறியுள்ளார்.
நன்னெறி சார்ந்த வணிகம்: சென்னையில் தேசிய மாநாடு
சென்னை,பிப்.15 நிலையான வணிகத் தீர்வுகளில் முன்னோடியாக விளங்கும் ரீஃபெக்ஸ் குழுமம் சென்னையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உலகளாவிய காம்பேக்ட் நெட்வொர்க் இந்தியா (UN GCNI)-வின் 19-ஆவது தேசிய மாநாட்டு நிகழ்வில் அதன் தலைமைத்துவத்தையும் பொறுப்பான வணிக நடைமுறைகளுக்கான அர்ப் பணிப்பையும் வலுப்படுத்தியது. நீடித்த வளர்ச்சி , நிதி மற்றும் கொள்கை ஆகிய செயற்பிரிவுகளில் தேசிய அளவிலும் மற்றும் உலக அளவி லும் பிரபலமான தலைவர்களை ஒருங்கி ணைந்த இந்த இரு நாள் மாநாட்டு நிகழ் வில் ரீஃபெக்ஸ் குழுமம் முன்னணி செயற் பாட்டாளராக முனைப்புடன் பங்கேற்றது. நீடித்த வளர்ச்சி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் நன்னெறி சார்ந்த வணிகம், நேர்மை ஆகிய தலைப்பு கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் கலந்துரை யாடல்களை இந்த குழுமம் முன்னெடுத்தது. ஐக்கிய நாடுகள் சங்கத்தின் நீடித்த வளர்ச்சிக்கா‘ன இலக்குகள் மீது தனது பொறுப்புறுதியை தமது குழும்ம் மீண்டும் உறுதி செய்துள்ளதாக ரீஃபெக்ஸ் குழு மத்தின் நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் கூறினார்.
மேல்பாக்கம் கிராம மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன் கோரிக்கை
திருவள்ளூர், பிப்.14- மேல்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர்க ளுக்கு, மறு குடியமர்வு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், விவ சாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேல்பாக்கம் கிராமத்தில் எல்லா சாதியினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை தமிழ்நாடு அரசு பேணிக்காப்பது அதன் கடமையாகும். வனத்துறையில் குடி யிருக்கும் மக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும். கடந்த 5 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இவர்களை வன உரிமை பாதுகாப்பு சட்டம் 2006 ன் படி மறுகுடியமர்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பரம்பரை பரம்பரை யாக வாழ்ந்து வரும் ஏழை எளிய மக்களை அகற்றுவது ஏற்க முடியாது. வனத்துறை யில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு நீதி மன்றத்தில் சிறப்பு மனுவை தாக்கல் செய்து அம்மக்களை பாதுகாக்க வேண்டும். அதுவும் வீடுகளை அகற்றுவதற்கான நேரம் இதுவல்ல. அடுத்த 10 நாட்களில் மாண வர்களுக்கு பொதுத்தேர்வு எழுத வேண்டிய நேரமாகும். இந்த நிலையில் வீடு களை அகற்றுவது, தற்கொலை செய்வ தற்கு சமமாகும். பொது தேர்வை எதிர் நோக்கி உள்ள நிலையில் மாநில அரசும் இதனை கணக்கில் கொள்ள வேண்டும். வனத்துறை சட்டத்தின் படி மறு குடி யமர்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிறகு தான் வீடுகளை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் வலு வான போராட்டங்களை நடத்த வேண்டி யிருக்கும். தமிழ்நாடு அரசும், காவல் துறையும் போராட்டத்தை தூண்டாமல் சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என துளசி நாராயணன் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க கொடியை ஏற்ற விடாமல் காவல்துறையினர் கெடுபிடி
திருவள்ளூர், பிப்.15- திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை அடுத்த மெய்யூர் ஊராட்சி குரு புரம் யூரேகா நகரில் வெள்ளியன்று (பிப். 14) தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 33ஆவது அமைப்பு தினத்தை யொட்டி சங்க கொடியை ஏற்றி, பெயர் பலகை திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் பெரியபாளையம் காவல் நிலைய காவலர்கள் மூன்று பேர் வியாழக்கிழமை இரவு வந்து கொடி கம்பம், தகவல் பலகை ஆகியவற்றை நடக்கூடாது, கம்பத்திற்கு வண்ணம் பூசுவதை கூட தடுத்து நிறுத்தினர். கேட்டால் பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் நடக்கூடாது என்று தெரிவித்தனர். பட்டா இடம் என்று சொன்னாலும் காவல்துறை யினர் செவிசாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து அமைப்பு தினமான வெள்ளியன்று (பிப் 14), குருபுரத்தில் காவல்துறையினர் தடைகளை எதிர்த்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கொடி ஏற்ற ஏற்பாடு நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை டிஎஸ்பி வந்து விசாரணை நடத்தினர். பட்டா இடம் என தெரிய வந்ததும் டிஎஸ்பி அமைதியாக திரும்பிச் சென்றார். இதையடுத்து சங்கக் கொடியை மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு ஏற்றி வைத்தார். மாநில துணைத் தலைவர் இ.கங்காதரன் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு, திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தரராசன், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.சம்பத், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், வட்டக் குழு உறுப்பினர்கள் முருகன், விஜய குமார், டில்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
கிருஷ்ணகிரி, பிப்.15 - காவேரிப்பட்டணம் ஒன்றியம், கூரம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு ஆசிரியர் உசேன் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பிறகு, மாணவனிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கல்வி அலுவலர்களிடம் காவல் துறையிலும் பெற்றோர்களால் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்தனர்.
9 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் காவல்துறை வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி, பிப்.15- காவேரிப்பட்டினம் பகுதி அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் அண்மையில் திருமணமானது கண்டுபிடிக்கப்பட்டது. 3 நாள் விடுமுறைக்கு பின் தாலியை மாணவி சீருடைக்குள் மறைத்து வைத்தபடி பள்ளிக்கு வந்துள்ளார்.ஆனால் மாணவி தாலியை அடிக்கடி சீரடிக்குள் தள்ளித்தள்ளி மறைப்பதை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து மாணவியிடம் விசாரித்த ஆசிரியர்கள் மாவட்ட சமூகநலத்துறைக்கு,மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும்,தகவல் தெரிவித்ததுடன் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வீட்டில் விசேஷம் என கூறிய மாணவி 3 நாட்கள் விடுப்பு எடுத்தது திருமணத்திற்கு தான் என்பதும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வாலிபர் மற்றும் மாணவியின் தாய்,தந்தையர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்
திருவண்ணாமலை, பிப்.15- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான பிரச்சார கருத்தரங்கம் திரு வண்ணாமலையில் நடை பெற்றது. தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக திருவண்ணா மலை அடுத்த கண்ணக்குறு க்கையில் உள்ள அருணை வித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது .இதில் பரணி வித்யாலயா கல்லூரி முதல்வர் ஹேமாவதி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் இணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுமதி மற்றும் போளூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், பணியாளர்கள் அனிதா, சாந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
உயிருக்கு போராடும் தொழிலாளி
இரக்கமற்ற தொழிற்சாலை நிர்வாகம்
கிருஷ்ணகிரி, பிப்.15 - தேன்கனிக்கோட்டை வட்டம், தளி அருகே உள்ள ஒட்டர் பாளையம், கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மகாலட்சுமி கணவனை இழந்து,கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார். இவரது 20 வயது மகன் எஸ்.சாந்தன் மற்றும் 3 ஒப்பந்த தொழிலாளர்கள் ஓசூர் சிட்கோ பகுதியில் ராஜ்ஸ்ரீரியா தொழிற்சாலையில் மேற்கூரை கட்டுமான பணியில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் கண்காணிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேற்கூரை பொருத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எஸ். சாந்தன் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தொழிற்சாலைக்குள், உயரமான பகுதி களில் நின்று வேலை செய்யும் போது அணிவதற்கான தலைக்கவசம், இடுப்பு பெல்ட், பிணைக்கும் கயிறு உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப் படாததால் கீழே விழுந்த சாந்தன் தலை முதுகு கால் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் பெங்களூருவில் உள்ள கேசிமோ பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆரம்ப நாளில் சாந்தனின் அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், கடந்த 20 நாட்களாக பணம் கட்ட மறுத்து வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சாந்தனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள கட்டாயம் பணம் தேவைப்படுகிறது. அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்கள், நண்பர்கள் பல இடங்களில் கடன் வாங்கி சாந்த னின் மருத்துவச் செலவுகளை செய்து வரு கின்றனர். உயிர் ஊசலாடிக் கொண்டி ருக்கும் சாந்தன் மருத்துவ செலவுக்கு பணம் கட்ட முடியாத இக்கட்டான நிலை யில் அவரது தாய் உள்ளார். சிஐடியு எச்சரிக்கை இந்த தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புரு ஷோத்தம ரெட்டி, சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர் பி.ஜி.மூர்த்தி இருவரும் விடுத்தி ருக்கும் அறிக்கையில், சாந்தனின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும். மீறி னால் தொழிற்சாலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர்.
பஞ்சமி நிலங்களை அபகரிக்கும் சாதி ஆதிக்க சக்திகள் கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
திருவண்ணாமலை, பிப்.15- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி அருகே அருங்குணம் கிராமத்தில் பஞ்சமி நிலங்களை அபகரிக்க முயலும் சாதி ஆதிக்க சக்திகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: வந்தவாசி தாலுகா, அருங்குணம் கிராமத்தை சேர்ந்த செல்லன் என்பவருக்கு தமிழக அரசு பஞ்சமி நிலம் வழங்கியுள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாததால்,சாதி ஆதிக்க சக்திகள் சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து செல்லன் நிலத்தை அபகரித்தனர். வருவாய் ஆவணங்களில் திருத்தங்கள் செய்துள்ளனர். தாத்தா வுக்கு ஒப்படைவு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தை தங்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும் என்று செல்லன் குடும்பத்தினர் மனு செய்துள்ள னர். தாழ்த்தப்பட்ட மக்களின் நில உரி மையாளர் பதிவேட்டில், தவறாக சேர்க்கப்பட்ட சாதி ஆதிக்க சக்கதிகளின் பெயர்களை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் கடந்த ஆண்டே, மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தது. எனவே, பஞ்சமி நிலத்தின் உரிமை யாளர் ஆவணங்களில் முறைகேடாக பதி வாகியுள்ள உயர் சாதியை சார்ந்த கருணா கரன்,செல்லப்பன் பெயர்களை நீக்கம் செய்து, சுகுமார், திலகராஜ் அண்ணா மலை ஆகியோருக்கு மீண்டும் பட்டா ஒப்படை செய்ய வேண்டும். சாதி ஆணவத்தோடு பயிர்களை நாசம் செய்த சாதி வெறியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை கள் தடுப்பு சட்டத்தின் கீழ் தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.