districts

img

ஏகோஜி மகாராஜபுரம் வெண்மணி நகரில் குடிசைகளை தீ வைத்து கொளுத்திய சமூக விரோதிகள்

மயிலாடுதுறை, ஆக.5 - ஏகோஜி மகாராஜபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பட்டிய லின மக்களின் குடிசை வீடுகளை  சமூக விரோதிகள் தீ வைத்து கொளுத் திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு பல ஆண் டுகளாக பட்டியலின மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப் படாததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி தலைமையில் கடந்த ஜூலை 6  முதல் அரசு புறம்போக்கு இடத்தில்  குடிசை அமைத்து போராடி வரு கின்றனர்.  அரசு அதிகாரிகள் இடத்தைப் பிரித்து தராமல் அலட்சியம் காட்டிய தால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப் பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள்  முன்னிலையில் 45 குடும்பங்க ளுக்கு இடங்கள் பிரித்து வழங்கப் பட்டன. இதனால் ஒவ்வொரு குடும் பத்தினரும் கூரை வீடுகளை கட்டி,  அந்தப் பகுதிக்கு ‘வெண்மணி நகர்’ என பெயர் சூட்டி, அங்கேயே தங்கி இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஞாயிறன்று இரவு அனைவரும் அவரவர் வீடு களில் உறங்கிய நிலையில்  அதிகாலை  3.15 மணியளவில், வெண்மணி நகரையொட்டியுள்ள பகுதியில் வசிக்கும்  இராஜாங்கம் என்பவரின் மகன்களான விஜயசேகரன், பிரபா கரன், கமலகாசன், ஆனந்த், அசோக்,  ரவிநாத், இராஜாங்கத்தின் மனைவி லெட்சுமி ஆகியோர் பயங்கர  ஆயுதங்களுடன் வந்து முரளி மற்றும்  சித்ரா ஆகியோரது வீடுகளில் (இரண்டு வீடுகள்) பெட்ரோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.  வீடு எரிவதை கண்டு அலறிய டித்து வெளியே வந்த அவர்கள், சத்தமிட்டதை கேட்ட மற்ற வீடுகளில்  வசித்தவர்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்தனர். ஆனால் இரு வீடுகளும் முற்றிலும்  எரிந்து விட்டன. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர்கள் புதுப் பட்டினம் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளனர். குடிசை வீடுகளை தீ வைத்து  கொளுத்திய நபர்கள், ஏற்கனவே  கடந்த ஜூலை 20 அன்று வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, ‘வீடு களை தீயிட்டு கொளுத்துவோம்’ என மிரட்டியது  குறித்து சீர்காழி  கோட்டாட்சியரிடம் புகார் அளிக்கப் பட்டது. தற்போது இரு வீடுகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இச்சம்பவத்தை நிகழ்த்திய சமூக  விரோதிகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டுமென்றும், வெண்மணி நகரில் வசிக்கும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டுமென்றும் மார்க்சி ஸ்ட் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.