சிதம்பரம், ஆக.23- அமெரிக்க வாழ் இந்தி யரான நந்திகா தேவராஜன் பழங்குடியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக பிரத்யேக அமைப்பான பீட்ஸ் டு ட்ரீம்ஸ் நடத்தி வருகிறார். இவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு அவர் உரு வாக்கிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆங்கி லத்தில் சரளமாக பேசவும் எழுதவும் கற்பித்து வரு கிறார். இத்திட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், எறையூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஹரிணி பயனாளியாக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இவர் சாரதா மகளிர் கல்லூரி, பெரம்ப லூர் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு, பயின்று வருகிறார். இவருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.6 ஆயிரத்து 500 அண்ணா மலைப் பல்கலைக்கழக துணை வேந்தர், இராம. கதிரேசன் வழங்கினார். இந்நிகழ்வில் அண்ணா மலை பல்கலைக்கழக தகவல் மற்றும் கணினி அறி வியல் துறையை சார்ந்த உதவி பேராசிரியர் ஜெய பிரகாஷ் ஜி.பரதன், அறி வியல் மற்றும் கணினி துறைத்தலைவர் அரவிந்த் பாபு, பீட்ஸ் டு ட்ரீம்ஸின் நிறு வனர் தலைவர் நந்திகா தேவராஜன் மற்றும் பழங்குடி இன நலத்துறை இயக்குநர் அண்ணா துரை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பீட்ஸ் டு ட்ரீம்ஸ் அலுவலர் லாவண்யா ஏற்பாடு செய்திருந்தார். நடப்பு கல்வியாண்டில் பழங்குடியின மாணவி கள் 40-க்கும் மேற்பட்ட வர்களுக்கு இந்த அமைப்பு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.