districts

img

73 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை அடுத்த  வாழவந்தான் கோட்டையில் உள்ள இருளர் இனத்தை சேர்ந்த 73 குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அதே  போல் பூண்டி அருகில் உள்ள அரியத்தூர் ஊராட்சி அப்துல் கலாம் இருளர் குடியிருப்பு பகுதியில் வாழும் 26 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், திருவள்ளூர் வட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.செல்வராஜ், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இ.கங்காதுரை, சிஐடியு நிர்வாகி முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.