சென்னை, ஏப்.29- ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு மே 7ஆம் தேதி முதல் இ பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதி கரித்துக் கொண்டே இருக்கிறது. பொது வாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதி கரித்துள்ளது. இந்நிலையில் வெயிலில் இருந்து விடுபட்டு விடுமுறை தினத்தை கழிக்க சுற்றுத்தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் செல்லத் தொடங்கி யுள்ளனர். இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாக னங்களுக்கு மே 7ஆம் தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என வன சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரி வித்துள்ளது. இந்த இ.பாஸ் நடைமுறையை மே 7 முதல் ஜூன் 30 வரை அமல்படுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி யர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இ பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது. இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் என்றும் உள்ளூர் மக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரி வித்தனர். இ பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவிறுத்தியுள்ளனர். ஊட்டி பகுதிக்கு மட்டும் 20 ஆயிரம் வாகனங்கள் தினசரி வருவதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில் ஒரேநாளில் இத்தனை வாகனங்கள் வந்தால் எப்படி என கேள்வி எழுப்பிய நீதிபதி கள் ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்ச னைக்கும் அரசு தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.