districts

img

கனிம வளங்களை அதானிக்கு தாரைவார்த்த பாஜகவை தோற்கடிப்பீர்: இ.முத்துக்குமார்

கள்ளக்குறிச்சி,ஏப்.15 - விழுப்புரம் மக்களவைத்தொகுதி விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் கள மருதூர் கடை வீதியில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பேசுகை யில், பாஜக ஒரு காட்டு மிராண்டிகளின் கட்சி என்பதற்கு பலசம்ப வங்களை உதாரணமாக கூறலாம். குறிப்பாக மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு அம்மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டி அதில் பழங்குடியின இளம் பெண்களை நிர்வாணப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது. சிறு பான்மையினரை கும்பலாக தாக்கிக் கொல்வது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்திய கனிம வளங்களை உலக பெருமுத லாளி அதானிக்கு வாரிக் கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் மோடி,  இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் மின்சாரத்திற்காக எடுக்கப்படும் நிலக்கரியில் 10 விழுக்காடு  கழிவாக இருக்கும். அதை  மின்சார உற்பத்திக்கு பயன்படுத்த முடியாது என வேண்டுமென்றே ஒதுக்கி ஒவ்வொரு ஆண்டும் அந்த கழிவுகளை அதானிக்கு கொடுக்க வேண்டும் என்று மோடி அரசு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதானிக்கு இதன் மூலம்  ஒருஆண்டிற்கு அதானிக்கு ரூ.28 ஆயிரம் கோடி லாபம்  கிடைக்கிறது. கிளீன் இந்தியா, மேக்இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்று வாய்க்கு வந்த பொய்களை அவிழ்த்து விடும் மோடியை நாட்டை விட்டு துரத்தி அடிக்கும் தேர்த லாக மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆகவே விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்க ளிக்க வேண்டும்  என்று முத்துக்குமார் கேட்டு கொண்டார். ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மோகன் தலைமை யில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கண்ணன்,  சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், திமுக ஒன்றிய செயலாளர் கே.வி. முருகன்,சிபிஎம் ஒன்றிய கவுன்சிலர் இ. அலமேலு, மாவட்ட குழு உறுப்பினர் கே.அய்யனார், மதிமுக ஒன்றிய செயலாளர் எம். ஏழுமலை, விசிக ஒன்றிய செயலாளர் தே.வெற்றி முரசு, எஸ்.பாண்டியன் (தவாஉக), சிபிஎம் ஒன்றிய நிர்வாகிகள் வி.சுரேஷ், ஏ.தங்கமணி, டி.ரகு,கே. சக்கரவர்த்தி,டி.சிவக்குமார், வி.ராஜி, எ.மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் கே.ஆனந்த்ராஜ் வரவேற்றார்.