சென்னை, நவ. 30- பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மிதமான முதல் கன மழை பெய்து வரு கிறது. குறிப்பாக சென்னை, திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த தரை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி.நகர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத் தாங்கல், கிண்டி, சேத்துப்பட்டு, வில்லிவாக்கம், கீழ்ப்பாக்கம், திரு வான்மியூர், அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. அதேபோல் கோயம்பேடு, வடபழனி, முகப்பேர், போரூர், மதுரவாயல், வானகரம், தாம்பரம், மேடவாக்கம், உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மேலும் வடசென்னை பகுதிகளில் திருவொற்றியூர் ராஜாஜி நகர், கார்கில் நகர், மணலி எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும், மணலி நெடுஞ்சாலை, காமராஜ் சாலை போன்ற பகுதிகளில் சாலை களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமின்றி எண்ணூர், திரு வொற்றியூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அலைகள் பாறை மீது பெரும் சத்தத்துடன் அடிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் படகுகள், வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ள னர். தென் சென்னையில் ஓஎம்ஆர் சாலை , துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் தெரு, பெருங்குடி சீவரம் தெருக்களிலும், தாழ்வான பகுதிகளான கள்ளுக்குட்டை, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், சோழிங்கநல்லூர் காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தேங்கிய மழை நீரை அப்புறபடுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, சென்னையில் உள்ள சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்னெச்சரிக்கையாக வாகன உரி மையாளர்கள் கார்களை நிறுத்தினர். சென்னை மாநகர் சாலையில் அரசு பேருந்துகளைத் தவிர தனி யார் வாகனங்கள் மிக குறைவான எண்ணிக்கையில் சென்றது. இத னால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பெரிய அளவில் பாதிக்கப் பட்டது. மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஊழியர்களும், காவல் துறையினரும், தன்னார்வலர்களும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி களை வழங்குவது மட்டுமின்றி, மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வரு கின்றனர்.