வேலூர், டிச.20- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்கத்தின் அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதி யாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் தாராளமாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும். மருந்து விற்பனை பிரச்சினைகளுக்கு சட்டபூர்வமான வேலை விதிகள் உரு வாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.கெஜராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செய லாளர்கள் லட்சுமி நரசிம்மன் துவக்கி வைத்தார். மாநிலத் தலைவர் பி. சத்திய நாராயணன், மாவட்டச் செயலாளர் அருள், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசு ராமன் ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.