districts

img

டெம்போ நிறுத்ததில் கட்டணம் உயர்வு: புதுவையில் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி, ஏப். 22- புதுவை புதிய பேருந்து நிலை யத்திலிருந்து முத்தியால் பேட்டை, கோரிமேடு, முத்திரை யர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போக்கள் இயக்கப்படுகிறது. புதுவையை பொருத்த வரை நகரப் பகுதி களுக்குள் செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் புதுவை மக்கள் மட்டுமன்றி வெளியூரிலிருந்து வருபவர்களும் டெம்போக் களையே அதிகம் பயன்படுத்து வர். பேருந்து நிலையத்தில் டெம்போக்களை நிறுத்தி பயணி களை ஏற்றுவதற்கு நகராட்சி அடிக்காசு வசூல் செய்கிறது. இந்த அடிக்காசு வசூலுக்கு நக ராட்சி சார்பில் ஒப்பந்தம் விடப்படும். சமீபத்தில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் அடிக்காசை ரூ. 10இல் இருந்து ரூ. 20ஆக உயர்த்தியுள்ளது. இதற்கு டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டெம்போ நிறுத்துமிடத்தில் மேற்கூரை சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. பேருந்து நிலையத்தின உட்புறத்தில் 4 டெம்போக்களை மட்டுமே நிறுத்த முடியும். இவற்றை எல்லாம் சீரமைத்த பிறகுதான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 1ஆம் தேதி புதுவை நக ராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்தனர். மேலும் அடிக்காசும் செலுத்தவில்லை. ஆனால் நகராட்சி சார்பில் எந்த நட வடிக்கையம் எடுக்கவிலலை. இந்நிலையில், டெண்டர் எடுத்த தனியார் உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என டெம்போ ஓட்டு நர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து டெம்போ ஓட்டு நர்கள் சனிக்கிழமை (ஏப். 22) திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நகரம் மற்றும் புறநகர் பகுதியில் ஓடும் 125 டெம்போக்கள் இயங்காத தால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர்.