கடலூர், ஜூலை 7- சென்னையில் இருந்து வேதாரண்யத்திற்கு சென்ற அரசு பேருந்து கடலூர் ரெட்டிச்சாவடி அருகே வந்து கொண்டி ருந்தபோது சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டை யில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்டோரில் 22 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுவதால் நெடுஞ் சாலைத்துறை மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.