வேலூர், ஜூலை 5 - வேலூரில் தமிழ்நாடு பேட்மிண்டன் அமைப்பின் சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த ஜூன் 30 ஆம் தேதி தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பேட்மிண்டன் அமைப்பின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது, தமிழ்நாடு பேட்மிண்டன் வேலூர் மாவட்ட கவுரவத் தலைவர் உள்ள விஐடி துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி.செல்வத்தை தமிழ்நாடு பேட்மிண்டன் அமைப்பின் புரவலராக நியமித்துள்ளதாக தெரிவித்தார்.