திருவள்ளூர், டிச.29- திருப்பாலைவனத்தில் அரசு பள்ளிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒலிக்கும் திருக்குறள் ஒலி கருவினை முன்னாள் மாணவர்கள் வழங்கி யுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் , பொன்னேரி வட்டத்திற்கு ட்பட்ட திருப்பாலைவனம் கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் நடுநிலைப் பள்ளியில் 25 ஆண்டு களுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயி றன்று (டிச29) நடை பெற்றது. 1998-1999 ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒலிக்கும் திருக்குறள் ஒலி கருவினை வழங்கியுள்ளனர்.மேலும் பள்ளியின் சுற்றுச்சுவருக்கு வண்ணம் தீட்டியுள்ளனர். மேலும் முன்னாள் மாண வர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி யில் 1998-99 ஆம் ஆண்டு ஆசிரியராக பணிபுரிந்த தங்களது முன்னாள் ஆசிரியை வீரச்செல்வியை சிறப்பு அழைப்பாளராக அழைத்து அவரை கவுரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்வில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் இணைந்து நினைவு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.