districts

img

பக்கவாதம்: பொன்னான நேரத்தை தவறவிடாதீர்

 சென்னை, அக்.29-  பக்கவாதம் வந்தால் கோல்டன் அவர் என்று அழைக்கப்படும் நான் கரை மணிநேரத்திற்குள் மருத்துவ மனைக்கு நோயாளியை அழைத்து  வரவேண்டும்  என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை யின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜன் கேட்டுக்கொண்டார். உலக பக்கவாத நாளை முன்னிட்டு, சென்னை  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நரம்பியல் துறை சார்பில்  பக்கவா தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். தேரணிராஜன் தலைமை வகித்து பேசுகையில், பக்கவாதம் பாதிப்பு ஏற்பட்ட உடன், 4 ½ மணிநேரத்திற்குள் மருத்து வனையை அடையவேண்டும். அந்த  நேரம் பொன்னான  உயிர் பிழைக்கும் நேரம் என்று கூறினார். உயிரிழப்பு மற்றும் ஊனத்தைத் தடுக்க சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பக்க வாத நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் உயர்தர சிகிச்சை செய்வ தற்கு Biplanar கேத் ஆய்வகம் போன்ற உயர்தர உபகரணங்கள் உள்ளதையும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக செவிலியர் பள்ளி   மாணவர்களால் பக்கவாத விழிப் புணர்வு குறித்த மைம் நாடகம், நடத் தப்பட்டது.  பொன்னான நேரத்தில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் பக்கவாத அறிகுறிகளு டன் வந்த நோயாளி ஒருவருக்கு  த்ரோம்போலிடிக் சிகிச்சை அளிக்கப் பட்ட பிறகு பக்கவாதத்திலிருந்து அவர் மீண்டார். அவரின் வெற்றிக் கதை நோயாளியின் மகள் மூலம் இந்த நிகழ்ச்சியில் விவரிக்கப்பட்டது. முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.  பொதுமக்களுக்கு பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.  பேரணியின் முடிவில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் பக்கவா தம் குறித்த உறுதிமொழி எடுக்கப் பட்டது. முன்னதாக  நரம்பியல் துறை  இயக்குநர் டாக்டர்.எஸ்.பாலசுப்ர மணியன் வரவேற்றார் பேராசிரியர் டாக்டர் எஸ்.வேலுசாமி  நன்றி கூறி னார்.