districts

ஆவணங்கள் மாயம்: ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவு

விழுப்புரம், ஆக. 31- பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய மூன்று ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021இல் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக நடைபெற்று வருகிறது. முன்னாள் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாசுக்கும் பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் தகவல் பதிவு, கால் அழைப்பு போன்ற பதிவுகள் அனைத்தும் சிபிசிஐடி காவல் துறையி னரால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த மூன்று முக்கிய ஆவணங்கள் மாயா மனதையடுத்து 24ஆம் தேதிக்குள் கண்டு பிடித்து தர நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இதுவரை மாயமான ஆவணங்கள் கிடைக்காததால் நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ அனுப்பவும், முக்கிய ஆவணங்கள் மாயமானது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கவும் நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.