districts

img

நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் பக்கவாத பாதிப்புக்கு முக்கிய காரணம்

சென்னை, அக். 30- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லூரி சார்பில் உலக பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்களன்று (அக். 30) நடைபெற்றது. பக்கவாதம் என்பது, மூளை ரத்தக் குழாய்களில் ஏற்படும் ரத்த உறைவு அல்லது ரத்தக் கசிவினால் திடீரென கை  கால்கள் செயலிழந்து போதல் மற்றும்  இன்ன பிற செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஆகும்.  இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு, ஒரு லட்சம் பேரில் 105  முதல் 152 பேர் பக்கவாதத்தினால் பாதிக்கப் படுகின்றனர். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து மிகுந்த நிலை, மது அருந்துதல் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை பக்கவாதத்திற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. இந்நிலையில்  உலக பக்கவாத விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.  பேரணியை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் இ.தேரணிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியின் முடிவில் அனைவரும் ‘பக்க வாத நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட னர். அதனைத் தொடர்ந்து,  பக்கவாத நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பக்கவாத நோய் தொடர்பான சந்தேகங்களை களை யும் விதமாக, மருத்துவர்கள் பொதுமக்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. பக்கவாத அறிகுறிகள் ஏற்பட்ட பின்னர் விரைந்து செயல்பட வேண்டிய முதல் நான்கரை மணி  நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மௌனமொழி நாடகம் செவிலிய மாணவிகளால் நடத்தப்பட்டது. பக்கவாதம் குறித்து கடந்த வாரம் நடத்தப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பரிசு வழங்கி, பக்கவாத நோய் அறிகுறிகள் ஏற்பட்டவுடன் விரைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான சிகிச்சை ஆகியவற்றை பற்றி விளக்கினார்.