காஞ்சிபுரம், பிப்.15 - காஞ்சிபுரம் ஆட்டோ தொழிலாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுப்பதை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நிறுத்த வேண்டும். என ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தி யுள்ளது. ஆட்டோ சங்கத்தின் படப்பை-ஒரகடம் வட்டார சங்கம் சிறப்பு பேரவை கூட்டம் திங்களன்று (பிப்.13), படப்பையில் நடை பெற்றது. இதற்கு மாவட்டத் துணைத் தலைவர் கே.சர வணன் தலைமை தாங்கி னார். பி.கண்ணன், டி.சத்திய குமார், கே.ரமேஷ், டி.ஜெயசங்கர், சி.சுதாகர், பி.மணியரசன் அகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செய லாளர் இ.முத்துக்குமார், ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், பொருளாளர் ஆர்.மது சூதனன், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.விஜய குமார் சிறப்புரையாற்றி னார். கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கார்த்திக் முறைசரா மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.குணசேகரன், தையல் சங்க மாவட்டப் பொருளாளர் பிரேமா குமாரி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.திருஞானம், கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகி ஆர்.நந்தகோபால் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார். புதிய மோட்டார் வாகன திருந்த சட்டத்தை தமிழகத் தில் அமல்படுத்தக் கூடாது. ஆட்டோ தொழிலாளர் களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் வட்டாரத் தலைவராக எஸ்.பூபாலன், செயலாளராக இ.இளவர சன், பொரு ளாளராக கே.சர வணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.