சிதம்பரம், மே 17-
சிதம்பரம் வட்டம், டி.நெடுஞ்சேரி கிராமத்தில் உள்ள செல்லப் பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் டி.நெடுஞ்சேரி, மடப்புரம், மணலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
இவர்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக குத்தகை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோவிலின் அறங்காவ லர் குழு ஏற்கனவே சாகுபடி செய்வோரை வெளியேற்றிவிட்டு, வரும் 19ஆம் தேதி புதிதாக ஏலம் விடப்படுவதாக நோட்டீஸ் வழங்கியுள்ளது. ஏழை விவசாயிகள் பல தலைமுறைகளைக் கடந்து விவசா யம் செய்து வரும் நிலையில் புதிய ஏலம் விடுவதும், நிலங்களைவிட்டு வெளியேற்றப்படுவதும் ஏற்கனவே விவசாயம் செய்து வரும் குடும்பங்களை மிகவும் பாதிக்கும்.
மேலும் தேவையற்ற குழப்பம் ஏற்படும். எனவே வரும் 19ஆம் தேதி நடத்தவுள்ள ஏலத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புவனகிரியில் உள்ள இந்து சமய அறநிலை யத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் தர்மதுரை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், துணைத் தலைவர் பி.கற்பனை செல்வம், இணை செயலாளர் பழ.வாஞ்சிநாதன், ஒன்றியத் தலைவர் வாசுதேவன், ஒன்றிய துணைத் தலைவர் குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்ரமணியம், புவனகிரி ஒன்றியச் செயலாளர் காளி கோவிந்தராசு, பொருளாளர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலரிடம் மனு அளித்தனர்.