காஞ்சிபுரம், மார்ச் 20 காஞ்சிபுரம் மக்களவைத் (தனி) தொகுதியில் மக்களவை உறுப்பி னராக இருப்பவர் ஜி.செல்வம். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதி யிலிருந்து, திமுக சார்பில் போட்டி யிட்டு, நாடாளு மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழ்க்கை வரலாறு இவர் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள சிறுவேடல் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தந்தை பெயர் கணேசன், இவரும் திமுகவைச் சேர்ந்தவர். ஜி. செல்வம் வழக்கறிஞர். 148 காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், மனைவி பெயர் லக்ஷ்மிகா,மகள் 2 மகன் 1 உள்ளனர். அரசியல் வாழ்க்கை இவர் 1996 ஆண்டில் வாலாஜாபாத் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1997 ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்த லில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு 2008 ஆம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். 2008 முதல் 2012 வரை மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளராக இருந்தார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரான மரகதம் குமரவேல் என்பவரிடம் தோல்வி அடைந்தார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் தற்போது கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் மாவட்ட துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.