districts

img

விவாகரத்து வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் வழக்கறிஞர்களுக்கு முன்னாள் நீதிபதி அறிவுரை

வேலூர், நவ. 22 – விஐடி பல்கலைக்கழகத்தில், வழக்கறிஞர் வி.சி.ராஜகோபாலாச் சாரியார் நினைவு கருத்தரங்கம் நடை பெற்றது.  இதில் பங்கேற்ற சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபா கரன், வட ஆற்காடு  மாவட்டத்தின் தலை நகராக வேலூர் இருந்தது. பின்னர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங் களாக பிரிந்து தற்போது வேலூரே மூன்று மாவட்டங்களாக பிரிந்துள் ளதை சுட்டிக்காட்டினார். நம்பக தன்மை முக்கியம் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது, நீதிபதி களுக்கு நீதி வழங்க நேரம் எடுக்கும். ஆனால், முடிந்தவரைக்கும் வழக்கு களை விரைவாக முடிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றங்கள் மீது பொது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும் என்றார். எது தேவை ? மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். இப்பொழுது நிறைய குறுக்கீடுகள் வருகிறது. இன்டர்நெட், செல்போன் என பல திசை திருப்புவதாக உள்ளது. நமக்கு எது  தேவை என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 1965 ஆம் ஆண்டு திருச்சியில் போட ப்பட்ட வழக்குக்கு 2020 ஆம் ஆண்டு நான் நீதிபதியாக இருந்தபோது தீர்வு கண்டேன். நீதிபதிகளின் எண்ணிக் கையை உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மிருகமாக்கும் போதை பழக்கம் வேலூர் அருகே 13 வயது சிறுமி  கூட்டுப் பாலியல் புணர்ச்சி செய்ய ப்பட்டார். இதற்கு காரணம் மது போதை தான். மனிதனை அது மிருக மாக்கி விடுகிறது. பள்ளி கல்லூரி அருகே மது விற்பதை தடுக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தானது. இந்த போதை கலாச்சாரம் நாங்கள் படிக்கும் காலத்தில் இல்லை. நீங்கள் இதிலிருந்து மீண்டும் வெளியே வர  வேண்டும். எல்லோரும் நல்ல குடிமக்க ளாக திகழ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சமூகத்திற்கு குடும்பம் தான் அடிப்படை. சென்னை உயர்நீதிமன் றத்தில் குடும்ப நல நீதிமன்றம் 1986 இல் ஒன்றுதான் இருந்தது. தற்போது 8 குடும்ப நீதிமன்றங்கள் உள்ளன. காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட மூன்று மாதத்தில், ஆறு மாதத்தில் விவா கரத்து வேண்டும் என நீதிமன்றத்திற்கு வருகிறார்கள். மேலும் விவாகரத்து காரணமாக குழந்தைகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். வழக்கறி ஞர்கள் விவாகரத்து வழக்கை கவன முடன் கையாள வேண்டும். ஏனென் றால் அதில் நான்கு பேருடைய வாழ்க்கை அடங்கி உள்ளது என்றும் அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு அறிவுரை மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு களை கண்டுபிடிக்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும். கல்வியே மாணவர்களுக்கு சிறந்த ஆயுதம். கல்வியால் நீங்கள் உலகை வெல்லலாம். ஏழை மக்களுக்கு நீங்கள் உதவ வேண்டும். செல்போனில் அதிக நேரம் மூழ்காதீர்கள். செல்போனால் குற்றங் கள் அதிகரிக்கிறது. நண்பர்கள், உற வினர்களை நேசியுங்கள். முடிந்தால் உதவி செய்யுங்கள் என்றும் கூறினார். முன்னதாக, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தனது தலைமை  உரையில், வழக்கறிஞர் தொழிலில் எனக்கு ஆசான் வி.சி.ராஜகோபா லாச்சாரியார்.  குழந்தைகளுக்கு சொத்து சேர்க்காமல் கல்வியை கொடுக்க வேண்டும் என்பார்.  கடவுள் மீதான பக்தி இருந்தாலும் கோவிலுக்கு செல்லாமல் பிறருக்கு உதவுபவர்கள் எல்லோரும் கடவுள் தான் என கூறு வார்.  காந்தியவாதியாக வாழ்ந்த அவரை ப்பற்றி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள, அவரது வாழ்க்கை வரலாற்று நூலை அடுத்தாண்டு வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என்றார். விழாவில் விஐடி உதவி துணை தலைவர் காதம்பரி எஸ். விசுவநாதன், அறங்காவலர் ரமணி சங்கர், வழக்கறி ஞர்கள் விஜயராகவலு, ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வர்த்தக பள்ளி  முதல்வர் (பொறுப்பு) வேணுகோபால் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் சக்தி சீனிவாசன் நன்றி கூறினார்.