districts

img

மாவட்ட அளவிலான தடகள போட்டி

கடலூர்,ஆக.12-

    மாவட்ட அளவிலான தடகள போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது.  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனி யாக 100, 200, 400, 1500 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.  

    இந்த போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தி ருந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்க ளது திறமைகளை வெளிப் படுத்தினர்.

    இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.  

    இதில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் சிவா, தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், இணை செயலாளர்கள் சங்கர், பாபு, கார்த்திக், பயிற்சியாளர்கள் மாயகிருஷ்ணன், இளவர சன், சிகாமணி, அருட் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.