பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். ஓசூர் சாராட்சியர் ஆர்.சரண்யா, துணைக் காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாத், போக்குவரத்து அலுவலர் கே.எஸ்.துரைசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.