districts

img

ராணிப்பேட்டையில் புதிய உடற்பயிற்சி கூடம்...

நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய உடற்பயிற்சி கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் செவ்வாயன்று (டிச. 24) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.   இந்த நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு, பெருமாள், ரவீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தால் மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும்  குற்றவாளிகளுக்கு கடுமையான  தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தி மாணவர்சங்கம் சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி கிளை தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைச் செயலாளர் சிவநந்தினி உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.