சென்னை, மார்ச் 20- சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும், ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கைகள் விடுத்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தற்போது முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைக்காக முன்களப் பணியாளர்க ளாகிய சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் பாதுகாப்பு கருதி, மேலும் 1.5 லட்சம் முகக் கவசங்கள், 2 லட்சத்து 40 ஆயிரம் ஜிங்க் மாத்திரைகள், 2 லட்சத்து 40 ஆயிரம் மல்டி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் 48 ஆயிரம் கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.