ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வியாழனன்று (ஜூலை 11) சிறப்பு முகாம் நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் அசோக் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.