districts

img

மாற்றுத்திறனாளி பெண்குழந்தைகள் 40 பேருக்கு கல்வி உதவித்தொகை

சென்னை,அக். 11- தமிழ்நாட்டைச் சேர்ந்த  திறமையான 40 மாற்றுத் திறனாளி பெண் குழந்தை கள் கல்வி பயில சைக்கிள் ப்யூர் அகர்பத்தி நிறுவனம் ரூ.10லட்சம் மதிப்பிலான உதவித்தொகையை வழங்கியுள்ளது. சர்வதேச பெண் குழந் தைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் செவ்வாயன்று (அக்.11) நடைபெற்ற விழாவில் இந்த உதவித்தொகைகளை நியூஸ் 7 தமிழ் தொலைக் காட்சியின் முன்னாள் நிகழச்சி தயாரிப்பு  நிர்வாகி மறைந்த சண்முகம் தாயார் உலகம்மாள் சின்னத்திரை கலைஞர்கள் கே.எஸ்.சுசித்ரா, சதீஷ் குமார், வித்யா மோகன், ரியா மனோஜ், மீரா கிருஷ்ணன், ஆனந்த செல்வன் உள்ளிட்டோர் வழங்கினர். உதவித்தொகை பெற்ற வர்களில் கணிசமானவர்கள் சிறுபான்மை குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இக் குழந்தைகள் ஓராண்டு மட்டுமல்லாமல் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை கல்வி  உதவித் தொகை பெறுவார்கள் என்று நிகழ்ச்சியில் பேசிய  சைக்கிள் பியூர் அகர்பதி யின் நிர்வாக இயக்குநர் அர்ஜூன் ரங்கா கூறினார்.தமது தந்தையார் ரங்கா ராவ் நினைவாக மைசூரில்  பார்வையற்ற மாற்றுத் திறனாளி பெண் குழந்தை கள் தங்கி பயில, உண்டு - உறை விடப்பள்ளியை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருவதாகவும் அவர்  கூறினார்.