districts

img

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

காஞ்சிபுரம், டிச.24 – வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தும், இதுவரை பட்டா வழங்க மால் அலைக்கழிக்கும் அதிகாரிகளை கண்டித்து காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருக்க இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்து, பல்வேறு நிலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை பட்டா வழங்காமல் அரசு அதிகாரிகள், தங்களை அலைக்கழிப்ப தாக கவலையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், மனு அளித்து ஒரு வருடமாகி யும், எந்த முன்னேற்றமும், நடவடிக்கை யும் இல்லை எனவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். 35 கிலோ இலவச ரேஷன் அரிசி வழங்க வேண்டும். உதவித்தொகை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான சங்கம் காஞ்சி புரம் மாவட்டக்குழு சார்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி.பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி.முனுசாமி, தலைவர் பி.பி.பாலாஜி, பொருளாளர் ஹரி கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் அண்ணாதுரை, என்.அன்பழகன், ஆர்.ஓம்குமார், எம்.லோகநாயகி, சி.லோகநாதன் உள்ளிட்ட  200க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்கள் எழுப்பினர்.