districts

img

‘முதலமைச்சர் சொல்வதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம்’ நாகை மாலி எம்எல்ஏ பேட்டி

சென்னை, மே 4 - முதலமைச்சர் சொல்வதற்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி தெரிவித்தார். மயிலாப்பூர் தொகுதியில் பக்கிங்காம் கால்வாயையொட்டி கோவிந்தசாமி நகர், இளங்கோ தெரு உள்ளது. கால்வாயிலிருந்து 60 அடி தொலைவில் உள்ள 259 வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 6 நாட்களாக குடியிருப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றி வருகின்றனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் குடியிருப்பு பகுதியை புதனன்று (ஏப்.4) நாகை மாலி எம்எல்ஏ, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் ஆகியோர் பார்வை யிட்டனர். அப்போது செய்தியாளர்க ளிடம் நாகை மாலி கூறியதாவது: வருவாய்த்துறை சான்றுபடி, இளங்கோ தெரு பகுதி நீர் நிலைப் புறம்போக்கு அல்ல. ரியல் எஸ்டேட் அதிபர், தனது  வியாபாரத் திற்கு இந்த குடியிருப்பு இடை யூறாக இருப்பதாக கூறி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. குடியிருப்புகளை அகற்றும்போது நீதிமன்ற உத்தரவு என்று தமிழக  அரசு கூறுவது சரியான அணுகு முறையல்ல. நீதிமன்ற உத்தரவுக ளில் இருந்து மக்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க சட்டப் பூர்வ மான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சென்னை நகரில் பல பத்தாண்டு களாக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள்தான் இந்த அரசின் வாக்கு வங்கியாக உள்ளனர்.

அவர் களை நீதிமன்ற உத்தரவை காட்டி வெளியேற்றுவது சரியல்ல. ஏழை எளிய மக்களுக்கான அரசு, அவர்க ளுக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டோம் என்று முதல்வர் சொல்கி றார். ஆனால், முதல்வர் சொல்வ தற்கும், நடைமுறைக்கும் வித்தியா சம் உள்ளது. இதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். குடியிருப்பு பகுதியில் காவல் துறையை குவித்து பதற்றத்தை ஏற்படுத்துவது சரியல்ல. இதனால் சிலருக்கு மாரடைப்பு  கூட வந்துள்ளதாக கூறுகிறார்கள். கடந்த காலத்தில் இதுபோன்ற  நடவடிக்கைகளை முதலமைச்சர் கண்டித்துள்ளார். குடியிருப்புகளை அகற்றுவதை 2 மாத காலத்திற்காவது ஒத்தி வைக்க வேண்டும். சென்னை நகரம் முழுவதும் இதேபோன்று பிரச்சனை உள்ளது. அவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின்போது கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.