districts

img

வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை வழங்க வலியுறுத்தி புதுச்சேரியில் தர்ணா

புதுச்சேரி, பிப்.11- சுகாதாரத்துறையில் அறி வித்தபடி வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை வழங்க வலி யுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறை யில் பணியாற்றிய ஊழியர்க ளின் வாரிசுதாரர்களுக்கு ஒரு முறை தளர்வின்படி பணி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்திருந்தார். முதல்வர் அறிவிப்பின்படி பணி ஆணை வழங்க கோரி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்திற்கு,  வாரிசுதாரர்கள் நலச் சங்கத்தின்  ஒருங்கிணைப்பா ளர் டேவிட் தலைமை தாங்கி னார். அரசு ஊழியர் சங்கங்க ளின் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச்  செயலாளர்ராதா கிருஷ்ணன்,  நிர்வாகிகள் முனுசாமி, ஜவகர் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். போராட்டத்தில் இணை ஒருங்கி ணைப்பாளர் ரமேஷ்  மற்றும் வாரிசுதாரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.