சிதம்பரம், நவ. 22- சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா தளத்தை பல்வேறு உள் கட்ட மைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணி களை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முன்னிலையில் முதன்மைச் செயலாளரும் சுற்றுலா துறை ஆணையருமான காக்கர்லா உஷா பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் வகையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.14.7 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அறி வுறுத்தினார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிதியின் மூலம் சிதம்பரத்தில் ரூ.8.65 கோடியில் கட்டப்பட்டு வரும் உணவகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், வட்டாட்சியர் செல்வகுமார் கிள்ளை பேரூ ராட்சி மன்ற துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செயற்பொறியாளர் பௌல், மாவட்ட சுற்றுலா அலுவலர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் முனுசாமி, பிச்சாவரம் படகு இல்ல அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.