districts

img

வீரர்களுக்கு விடாமுயற்சி-மன உறுதி வேண்டும்!

கடலூர், நவ.25- கடலூர் கம்மியம் பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று (நவ.25) மாண வர்களுக்கு கலைஞர் விளை யாட்டு உபகரணங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினார். பிறகு உரையாற்றி துணை முதலமைச்சர், தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமங்களில் இருந்தும் திறமையான வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங் கள் வழங்கப்படுகிறது. இதுவரை 30 மாவட்டங் களுக்கு விளையாட்டு உப கரணங்கள் கொடுக்கப் பட்டுள்ளது. விடாமுயற்சி, திட்டமிடல், மன உறுதி ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் இருக்க வேண்டும் என்றார். நம்பிக்கை மேலும், உழைப்புக்கு பெயர் பெற்ற கடலூர் மக்க ளுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டது. அதாவது கடலூர் மகளிர் மீது வைத்துள்ள நம்பிக்கை யினால் கொடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 5 லட்சம் மகளிர் பயன்பெறுகின்றனர். அதே போல் கட்டணமில்லா விடி யல் பயண திட்டத்தில் மூலம் 17 கோடி மகளிர் பயணம் பெற்றுள்ளனர். புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 21 ஆயிரம் மாணவர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுகின்றனர்  என்றும் கூறினார். கடலூர் அண்ணா விளை யாட்டு மைதானம்  ரூ.1 கோடியே 20 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. விருத்தாசலத்தில் உள்ள  மினி மைதானம் ரூ.15 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார். உபகரணங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சி களுக்கு கலைஞர்விளை யாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு  துணை முதலமைச்சர் வழங்கினார்.  இதைத் தொடர்ந்து, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1001 பயனாளி களுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் 16 பயனாளி களுக்கு ரூ.74 லட்சத்து 98 ஆயிரத்து 550 மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 9285 பயனாளி களுக்கு ரூ.71 கோடியே 24 லட்சம் மதிப்பிலும் 12 ஆயிரத்து 100  பயனாளிகளுக்கு ரூ.80 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விஷ்ணு பிரசாத் எம்.பி.,  சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. அய்யப்பன், சபா. ராஜேந்திரன், ராதா கிருஷ்ணன், சிந்தனை செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் அதுல்ய மிஸ்ரா, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மைய தாமரைச்செல்வன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேக நாத ரெட்டி,  உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் மாவட்ட வருவாய் அலு வலர் ராஜசேகரன் நன்றி கூறினார். துணை முதலமைச்சர் பின்னர் கடலூர் முதுநக ரில் உள்ள காவல் நிலை யத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து முதுநகரில் கலைஞர் நூலகத்தையும் திறந்து வைத்தார். மாலை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.