ஃபெஞ்சல் புயல் காரணமாக மாமல்லபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசித்த இருளர் பழங்குடியின மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமிற்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அரிசி, பாய், போர்வை, மதிய உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர் தாமோ.அன்பரசன், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.