சென்னை, நவ. 30- சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக் கடலில் உரு வாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு, 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 1,700 மோட்டார் பம்புகளை கொண்டு மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று தெரி வித்தார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் ஆர்.பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.