இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா மாரத்தான் போட்டி ராணிப்பேட்டையில் ஞாயிறன்று (டிச.5) நடைபெற்றது. ஓட்டத்தை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எஸ்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.