கிருஷ்ணகிரி,ஆகஸ்ட்.13-
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட சாணமாவு கிராமத்தில் 25 ஆண்டு களாக நில மீட்புக்காக போராடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு மக்கள் நன்றி யும்,பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் சாணமாவு கிராமத்தில் 1999 ஆம் ஆண்டு சர்வே எண் 12/2 ல் 0.95 ஹெக்ட ரில் ஆதி திராவிட நலத்துறையால் 41 தலித் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை ஆதிதிராவிட மக்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக ஆதிக்க சாதியினர் வழக்கு தொடுத்தனர்.அத்துடன் நிலத்தை அபகரிக்க முறை கேடான முறையில் அரசு அதிகாரிகளின் துணையுடன் பத்திரப்பதிவு செய்து அடியாட்களை வைத்து நிலத்தில் அடாவடி செய்து வந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,மார்க்சிஸ்ட் கட்சி வழி காட்டுதலுடன் மாநிலத் தலைவர் செல்லக் கண்ணு, பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் ஜி.ஆனந்தன் ஆலோசனைப்படி வழக்கு தொடுக்கப்பட்டது.
தலித் மக்களுக்கு கொடுத்த இலவச வீட்டுமனை பட்டா உரிமையை மீட்டிட வழக்கு தொடுத்து நீதிமன்றத்திலும், ஆதிக்க சாதியினரின் அடாவடிகளை தடுத்திட வீதியிலும் தொடர்ந்து போராட்ட மும் நடைபெற்று வந்தது. இதன் விளை வாக சாணமாவு தலித் மக்களுக்கு அரசு கொடுத்த பட்டாக்களுக்கான நில உரிமையை அங்கீகரித்து பத்து நாட்க ளுக்கு முன்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனை அடுத்து ஞாயிறன்று சாணமாவில் முன்னணி சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.செயலாளர் நாகேஷ்பாபு, மாவட்ட குழு உறுப்பினர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் வழக்கு குறித்தும்,நடந்த போராட்டங்கள் குறித்தும் விளக்கினார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதய ராஜ்,சுரேஷ்,வட்ட துணைத் தலை வர் சி.முத்து,கிளை நிர்வாகி சங்கர், சேதுமாதவன், எஸ்.ஆர்.ஜெயராமன் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் இந்த சாணமாவு தலித் மக்கள் நில மீட்பு போராட்டம் வெற்றி யடைந்துள்ளதை விழாவாக கொண்டாட வேண்டும் என மக்கள் கேட்டுக் கொண்டதையடுத்து விரைவில் வெற்றி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டது.