districts

img

சட்டப்பூர்வமான உரிமைகளை மறுப்பதா? ஆவேசம்

100 நாள் வேலை திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளின் சட்டப்பூர்வ மான உரிமைகள் மறுக்கப் படுவதை கண்டித்து செவ்வாயன்று (பிப்.21) தமிழ்நாடு முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவ லகங்கள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக கடலூர், விழுப்புரம், திரு வண்ணாமலை, கிருஷ்ண கிரி, வேலூர் ஆகிய மாட்டங்களில் போராட்டங் கள் நடைபெற்றது. வேலூரில் மாவட்டத்தில் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒன்றியத் தலைவர் சுகுமார் தலைமையில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலு வலர் க.ராமமூர்த்தி மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை களை கேட்டறிந்து, தனி தனியாக 310 மனுக்களை பெற்றுக் கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் உடனி ருந்தனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட் டத்தில் காவேரிப்பட்டினம், வேப்பனப்பள்ளி, கௌ மங்கலம், சூளகிரி, ஊத்தங் கரை, தளி ஆகிய ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநிலச் செய லாளர் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் பெரிய சாமி, தலை வர் திருப்பதி, கோடீஸ்வரன்,மாவட்ட வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அதிகாரிகளுடன் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் கோரிக்கைகைளை நிறை வேற்ற உறுதியளித்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். திரு வண்ணாமலை மற்றும் கடலூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாநில, மாவட்ட, வட்டார, ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.