டெங்கு காய்ச்சல்: மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
மதுராந்தகம், நவ. 6- செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட செய்யூர் ஊராட்சி, தேவராஜபுரம் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி அல மேலு. இத்தம்பதியின் இளைய மகள் யாத்திகா (6). இவர் கடந்த சில நாட்க ளாக காய்ச்சலுக்காக தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை யடுத்து, கிராமப்பகுதியில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளாததே சிறுமிக்கு டெங்கு தொற்று ஏற்பட்ட தாகவும். அதனால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ள தாக கிராம பொதுமக்கள் புகார் தெரி வித்தனர். இதனால், மாவட்ட சுகா தாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கண்ட கிராமப்பகுதியில் பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. எனினும், தேவராஜபுரத்தில் தூய்மை பணிகள் அனைத்தும் மந்தநிலையில் உள்ளது எனவும். ஊராட்சி நிர்வாகம் உடனடி யாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் சீர மைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலை யில், சுகாதாரத்துறை சார்பில் மேற்கண்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவு ரயில் மோதி வயதான தம்பதி பலி
செங்கல்பட்டு, நவ.6- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, விரைவு ரயில் மோதி வயதான தம்பதி உயிரிந்த சம்பவம் மறைமலைநகரில் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே திங்களன்று மாலை 2 சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு முதியவர் மற்றும் ஒரு மூதாட்டி என 2 சடலங்கள் இருந்தன. அந்த சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
காவலர் குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்கள் மீது நடவடிக்கை
சென்னை, நவ.6- காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், காவலர்கள் குறைதீர் முகாம், வேப்பேரி, காவல் ஆணையரகத்தில் திங்களன்று நடந்தது. இதில், கிழக்கு மண்டலத்தில் (திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்கள்) பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 282 மனுக்களை பெற்று ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டார்.
2 நாட்கள் குடிநீர் சப்ளை நிறுத்தம்
சென்னை, நவ.6- சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை 6 வழிப்பாதையாக மாற்றப்படுவதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் விஜிபி வளாகம் எதிரில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் புதனன்று மாலை 6 மணி முதல் வியாழனன்று மாலை 6 மணி வரை அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்குட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, அடையாறு, இந்திரா நகர், பெருங்குடி ஆகிய பகுதிகளிலும், மண்டலத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம், சோழிங்கநல்லூர், வெட்டுவாங்கேணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றலாம். மேலும் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
உயிர்வாழ் சான்றிதழ் ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்
சென்னை, நவ.6- ஒன்றிய, மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மூலம், ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களுடைய உயிர் வாழ் சான்றிதழ் வழங்குவதற்காக பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள பொது அஞ்சலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை பொது அஞ்சலக முதன்மை அதிகாரி சுவாதி மதுரிமா கூறியதாவது: டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் ஓய்வூதியர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று முகம், கைவிரல் ரேகை ஆகியவை எடுத்து சான்று பெறப்படுகிறது. இதற்கு ஓய்வூதிய தாரர்கள் ரூ.70 செலுத்த வேண்டும். மேலும் ஆங்காங்கே உள்ள அஞ்ச லகத்திலும் இதுபோல் ஓய்வூதியதாரர்கள் உயிர் வாழ் சான்று சமர்ப்பிக்கலாம். இந்த முகாம் இந்த மாதம் 30ம் தேதி வரை நடைபெறும். ஓய்வூதியதாரர்கள் அலைச்சலின்றி உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க பொது அஞ்சலகம் இந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.
நியாய விலை கடையில் உணவுத்துறை செயலாளர் திடீர் ஆய்வு
மாமல்லபுரம், நவ. 6- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் உள்ள கங்கை கொண்டான் மண்டபம் தெருவில் உள்ள நியாய விலை கடை மற்றும் ஐந்து ரதம் செல்லும் பகுதியான அண்ணா நகரில் அமைந்துள்ள நியாய விலை கடை களில், உணவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதில், பணியாளர்களிடம் கடையில் இருப்பு உள்ள பொருட்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கடையில் உள்ள பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல், வாயலூர் பகுதி யில் உள்ள நியாய விலை கடைகளிலும் ஆய்வில் ஈடுபட்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ரேணுகாம்பாள், பொதுவிநியோக திட்ட துணை பதிவாளர் சற்குணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். பின்னர், உணவுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நியாய விலை கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பணி கள் காரணமாக நியாய விலை கடை களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வது தாமதமானது. தற்போது, அனைத்து பகுதியிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதால், கடை களில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. அரசி கடத்தலை தடுப்பதற்கு டிஜிபி.சீமாஅகர்வால் தலைமையில் 4 எஸ்பிக்கள் கொண்ட 500 பேர் கொண்ட குழுவினர் பணியில் உள்ளனர். இது வரையில், உணவு பொருட்கள் கடத்தல் தொடர்பாக 9 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 28 ஆயிரத்து 802 குவிண்டால் அரிசி பறி முதல் செய்யப்பட்டது. அதேபோல், கடத்தல் சம்பவம் தொடர்பாக 9 ஆயிரத்து 543 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பாம்பன் பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி
இராமேஸ்வரம், நவ.6- பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ஆய்வு பணி வரும் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் கடலில் கடந்த 5 ஆண்டுகளாக கட்டப் பட்டு வந்த புதிய ரயில் பாலம், பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு ஆய்வுகள், ரயில் சோதனை ஓட்டங் கள் நடைபெற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி வரும் 20 ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறக்க திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் வரும் 13, 14 ஆகிய 2 நாட்கள், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வு செய்யவுள்ளார். இந்நிலையில் புதிய பாலத்திற்கு ‘கலாம் சேது’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரி வித்தனர்.
காவலர்களை கத்தியால் கிழித்து விட்டு தப்பிய ரவுடி
சிதம்பரம், நவ 6- சிதம்பரம் அருகே குமராட்சி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்கள் தேவநாதன் (48) ஜெயராமன் (45) குமராட்சி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 6 ந்தேதி நள்ளிரவு 1 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கடலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தினார்கள். அப்போது அந்த நபர் தனது கையில் மறைத்து வைத்து இருந்த கத்தியால் காவலர்களை கையில் கிழித்து விட்டு தப்பி சென்றுள்ளார் இதனை அறிந்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் வாகனத்தை துரத்தி சென்றனர். அப்போது வழியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து அந்த நபர் தப்பி செல்ல குதிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அவரது கையில் முறிவு ஏற்பட்டது. இதனை பார்த்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த விஸ்வநாதன்(45) என்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் கத்தி எப்படி வந்தது என்பது குறித்தும் எதற்காக இப்படி நடந்துகொண்டார். வேறு ஏதேனும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்து பல்வேறு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
கள்ளக்குறிச்சி, நவ 6 - மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து வகை மாற்றித்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட வேலை வாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழில் பயிற்சிகளுக்கான பயனாளிகள் தேர்வு நடத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஆகியவைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி,சேலத்தில் வரும் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் நடைபெற உள்ள முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் தனியார் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க https://forms.gle/9ksxaOGa6g6LMEdi6 என்ற வலைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினையும்,04151-295422 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆசிரியர்களுக்கு பயிற்சி
ராணிப்பேட்டை, நவ. 6 - ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்டத் தலைவர் பேராசிரியர் கலை நேசன் தலைமையில் செவ்வாயன்று (நவ. 5) ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2024 காண வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பழனிவேல் வரவேற்புரை யாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் பூபாலன் துவக்கி வைத்து பேசினார். இந்த ஆண்டுக்கான ஆய்வுக் கருப்பொருள் நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை ஆகும். இந்த தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ராணிப்பேட்டை மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறி யாளர் சந்திரன் சிறப்புரையாற்றினார். பயிற்சி கருத்தாளர்கள் கிருபானந்தம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஸ்ரீகாந்த், அன்பரசி பயிற்சி அளித்தனர். இறுதியாக மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
நீதிமன்ற தீர்ப்பை மீறி பாதையை அடைத்து தீட்சிதர்கள் அராஜகம்
சிதம்பரம், நவ 6- சிதம்பரம் நடராஜர் கோவிலில் வளா கத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரம் சேதமான நிலையில் அதனை மாற்றி அமைக்கும் பணியில் கடந்த 3-ந் தேதி இந்து சமயம் அறநிலைய துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஈடுபட்டனர். இதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து வழக்கு 4-ந் தேதி சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் 15 நாட்களுக்கு எந்த விதமான பணியும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் கோவிலை விட்டு வந்தனர். இந்த நிலையில் கோவில் தீட்சிதர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கேட் வைத்து அடைத்துள்ளனர். இதனால் பல நூற்றாண்டு காலம் கோவிலுக்கு செல்லும் வழி தடை பட்டுள்ளது. இந்த கோவிலில் பூஜை செய்யும் பட்டாசிரியர்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தற்போது நடராஜர் கோவில் வழியாக சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் 15 நாட்களுக்கு கொடிமர பணிகளுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. ஆனால் தீட்சிதர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கோவிந்தராஜ பெரு மாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கேட் வைத்து அடைத்துள்ள னர். எனவே இதனை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இதுகுறித்து புகார் சிதம்பரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளிக்கப் பள்ளது.