யுஎன்ஐ செய்தி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஊதியம் வழங்காமல் மனஉளச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொண்ட நிழற் படகலைஞர் குமார் குடும்பத்திற்கு நீதியும், உரிய நிவாரணமும் கிடைக்க வலியுறுத்தி சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் வெள்ளியன்று (பிப்.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மன்ற நிர்வாகி பாரதிதமிழன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகாயராஜ் (உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்), அண்ணாதுரை, எம்.ஜி.ரவிச்சந்திரன், ம.மீ.ஜாபர் (டியூஜெ), ஆசீப் (மாற்று ஊடகமையம்), மணிமாறன் (எம்யூஜே) குமார் குடும்பத்தினர் மற்றும் அனைத்து பத்திரிகை, ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.