districts

img

தென்பெண்ணையாற்றின் கரையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர், டிச.16- கடலூர் தென்பெண்ணை மற்றும் கெடி லம் ஆற்றின் கரைகளை உயர்த்த வேண்டு மென வலியுறுத்தி கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.50ஆயிரம் நிவாரணம் அளிக்க வேண்டும். இரண்டு ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுவதுடன், மணல் அள்ளு வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் எம்.மருதவாணன் முன்னிலை வகித்தார். இணை பொது செயலாளர் எஸ்.கே.தேவநாதன் வர வேற்றார். பொது செயலாளர் பி.வெங்கடேசன், சிபிஎம்  மாவட்ட செயலாளர் கோ. மாதவன், காங்கிரஸ் மாநில துணை தலை வர் ஏ.எஸ். சந்திரசேகரன், சிபிஐ  துணைச் செயலாளர் வி.குளோப், கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ரவி, சுப்புராயன், குரு ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.