தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருவொற்றியூர் பொதுத் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் எம்.எப்.எல். ஆலை முன்பு சங்க நிர்வாகி மார்ட்டின் லியோ தலைமையில் வெள்ளியன்று (ஏப். 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஆர்.முத்துசாமி, தலைவர் ஆர்.ஜெயராமன், பொருளாளர் என்.அய்யனார், ஜாக்கப் ஆகியோர் பேசினர்.