districts

img

 தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைபடுத்தப்பட்டோர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செப்-15 அன்று கும்மிடிப்பூண்டியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட பொருளாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்ட தலைவர் எழிலரசன், மாவட்ட செயலாளர் கன்னியப்பன், உட்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தலித் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

;