ஒன்றிய பாஜக அரசு எரிவாயு உருளை விலையை பன்மடங்கு உயர்த்தியதைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நகரத் தலைவர் முனியம்மாள் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் ஏ.தேவி, நகரச் செயலாளர் வீ.சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.