மணிப்பூர் கலவரத்திற்கு காரணமான பாஜக அரசு பதவி விலக வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூலை 25) திருவான்மியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி தொகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டக்குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வன், பகுதிக்குழு உறுப்பினர்கள் இ.பாபு, எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.