districts

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

  1. செங்கல்பட்டு அடுத்த திருமணி கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை மத்திய அரசு உடனடியாக திறந்து, உற்பத்தியை தொடங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கோவிந்தன், மாவட்ட செயலாளர் பி.சண்முகம், சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங்தாஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மபா.நந்தன், பொருளார் இரா.சதீஷ், சிபிஎம் வட்டக்குழு உறுப்பினர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
;