100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தி மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 4 மணி நேர வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் சக்கரவர்த்தி, மாவட்டச் செயலாளர் பெரியசாமி, தலைவர் திருப்பதி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்,