மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் ஆர்.விஜயகுமார் தலைமையில் அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.