புதுச்சேரி, அக். 26- இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் குழந்தைகள் பெண்கள் என்று அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வெடி குண்டு தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், உலக நாடுகள் அனை வரும் ஓரணியில் நின்று போரை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், இவ்விவ காரத்தில் ஒன்றிய பாஜக அரசின் தவ றான வெளியுறவு கொள்கைகள் மக்களி டத்தில் அம்பலப்படுத்தும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டை யில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் அ.மு.சலீம் ஆகியோர் தலைமை தாங்கினர். சிபிஎம் மூத்தத் தலைவர் சுதா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெரு மாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனிவாசன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்யா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் விசுவநாதன், முன்னாள் நாரா. கலைநாதன், மாநில நிர்வாகிகள் சேது செல்வம், தினேஷ் பொன்னையா, அந்தோணி, அமுதா, பெருமாள், ராமச்சந்திரன்,சுதா, சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.