அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து சிபிஎம் சார்பில் மாதவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதிச் செயலாளர் வி.கமலநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் வீ.ஆனந்தன், நிர்வாகிகள் அகஸ்டின், தமிழ்ச்செல்வி, கருத்திருமன், உதயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.