சென்னை, நவ. 2 - மாநகராட்சி அரங்குகளை தனி யாருக்கு குத்தகை விட எதிர்ப்பு தெரி வித்து சனிக்கிழமையன்று (நவ.2) வாலிபர், மாதர் சங்கத்தினர் செனாய் நகர் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெருநகர சென்னை மாநகராட்சி நேரடி கட்டுப்பாட்டில், செனாய் நகர் அம்மா அரங்கம், தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கம் உள்ளன. செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாட கையை 3.40 லட்சம் ரூபாயிலிருந்து 5.43 லட்சம் ரூபாயாகவும், சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாட கையை 20 ஆயிரத்து 650 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் (18 விழுக்காடு ஜிஎஸ்டி தனி) உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டு களுக்கு குத்தகை விட முடிவெடுக் கப்பட்டுள்ளது. வாடகை உயர்வு மற்றும் தனி யாருக்கு குத்தகை விடுவதை கைவிடக் கோரி 8வது மண்டல அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கூட்டு முறை யீடு இயக்கம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், பகுதித்தலைவர் பரந்தாமன், செயலாளர் எஸ்.மணி கண்டன், முன்னாள் பகுதி தலைவர் கே.மகேந்திரவர்மன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, செய லாளர் வெ.தனலட்சுமி, பகுதித் தலை வர் எம்.உஷா, செயலாளர் ஆர்.நாக ரத்தினம் உள்ளிட்டோர் பேசினர். இதனை தொடர்ந்து மண்டல அலு வலர் சுரேஷிடம், சங்கத் தலைவர்கள் மனு அளித்தனர்.